Krishna, this human body will decay and die..
But you have encroached into something more deep inside..
You will not go away, or leave your people, for whatever it is .
Maybe you are like some obsession, some growth that can never stop..
You can be planted inside, but once you take roots, you cannot be removed..
வருவாய்,வருவாய்-கண்ணா
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !
இணைவாய் எனதா வியிலே - கண்ணா !
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா !
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் !
எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !
துணையே, அமரர் தொழும்வா னவனே !
No comments:
Post a Comment